Skip to main content

ஏமி லவல் கவிதை மற்றும் வாழ்க்கை குறிப்பு

ஒரு புயலுக்குப் பின்



நீ பனிக்கட்டி மரங்களுக்கு கீழ் நடக்கிறாய்.
நீ செல்வதை அலங்கரிக்க
அவை தள்ளாடி, விரிசலிட்டு
தங்களை அபாரமாய் வளைக்கின்றன.
உனக்கு முன்
அவற்றை வண்ணத்துக்குள் சுண்டுகிறான் வெண்சூரியன்.
அவை நீலம்,
மேலும் மங்கலான ஊதா
மேலும் மரகதப் பச்சை.
அவை மஞ்சள்-பழுப்பு,
ஒளிர்பச்சை,
மேலும் கோமேதகம்.
அவை வெள்ளியால் பின்னப்பட்டு சுடரும்.
திடுக்கிட்டதால் நிச்சலனமாகி,
கொத்தாகி, சிம்புகளாகி, பன்னிறம் பெறும்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
பளீர்பனி நீ நடக்க கிறீச்சிடும்.
என் நாய்கள் உன் மேல் தாவி குதிக்கும்,
அவற்றின் குரைப்பு காற்றைத் தாக்கும்
உலோகம் மேல் கூரிய சுத்தியல் அறைதல்களாய்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.

நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
காலை பத்து மணிக்கு.


ஏமி லவல் (1874-1925) சிறுகுறிப்பு



ஏமி லவல் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அமெரிக்க படிமக் கவிஞர். எஸ்ரா பவுண்டுடன் இணைந்து ஒரு புரவலராகவும் எழுத்தாளராகவும் படிம இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். லவல் ஓரினச்சேர்க்கையாளர். ஆடா டிவைர் ரசல் எனும் நடிகையுடனான உறவு இவரது “Pictures of the Floating World” தொகுப்பில் உள்ள பிரபலமான காமக் கவிதைகளுக்கு தூண்டுதலாக அமைந்தது. லவல் குள்ளமானவர். சுரப்பிக் கோளாறால் வாழ் நாளெல்லாம் மிகப்பருமனாக தோற்றமளித்தார். கவிஞர் விட்டர் பைனர் மற்றும் எஸ்ரா பவுண்ட் இவரை காண்டாமிருகக் கவிஞர் என்று அழைத்தது இலக்கிய வரலாற்றின் மிக குரூரமான கேலி என்று கருதப்படுகிறது. லவல் தனிப்பட்ட உரையாடல்களில் பெண்ணியவாதத்தை மறுத்தவர். இறந்த ஒரு வருடத்தில் இவருக்கு புலிட்சர் விருது “What’s O’Clock” என்ற தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...