Skip to main content

மூரியல் ஸ்பார்க் கவிதைகள்

லண்டன் சுற்றுலா


கென்சிங்டன் பூங்கா


முதிய பெண்கள் மற்றும் துலிப் பூக்கள், மாதிரிப் படகுகள்

கையடக்கக் குழந்தைகள், நடமாட்ட அம்மாக்கள்,

கிளிகள் போல் தூரத்து பேருந்துகள்

தனியான ஆண்கள் மழை அங்கிகளை

கைமேல் கொண்டு – எங்கே போகிறார்கள்? தற்போது கோடையின்

மூட்டை முடிச்சுக்கள் மற்றும் வண்ணத் தெளிப்பு

ஒரு வருடத்துக்கு முன் விதைத்தது போல் வெளிவந்து விட்டபடியால்.



அந்நியள் வியந்தது என்ன?


லண்டனில் தனியாய் காபி உறிஞ்சியபடி

இவள் எங்கிருந்து வருகிறாள்?

ஷூக்கள், கூந்தல் – வங்கியில் அவளுக்கு ஏதுமிருப்பதாக எனக்கு படவில்லை.

அவளுக்கு ஆண்துணை உண்டா, எனில் அவன் எங்கே,

பத்தரை மணிக்கு லண்டனில் புத்தகம் படித்தபடி

ஏன் அமர்ந்து இருக்கிறாள்?


அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது

ஆண்துணை இன்றி, வேலையற்று, மளிகைக் கடையில் நாயுடன் அவசரமாக ஓடாமல்

தனித்து இருக்கும் படியாக. உறிஞ்சிடும் படியாக.



ஓய்வு நாள்


மூன்றே கால் மணிக்கு கடிகாரம் நின்று போனது;

மேலும் கைகளை அகலமாக விரித்து கொட்டாவி விட்டு அங்கே இருந்தது,

மேலும் அதை திரும்ப ஓட வைக்கவில்லை யாரும்,

ஞாயிற்றுக்கிழமை ஆகையால், நாங்கள் வேலையில் மூழ்கி இருந்தமையால்.


ஆகையால் அந்நாள் நிகழ்ந்தது, மறைந்தது.

ஆனால் துண்டுத் துண்டாய் கிழிக்க, தைக்க, நேசிக்க, வெறுக்க

நாங்கள் பின்பற்றின நேரம் சரியானதா

என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை; நிகழந்தவை எல்லாம்

ஞாயிற்றுக் கிழமை, லண்டன், மணிமுழக்கங்கள், பேச்சு, விதி.




மூரியல் ஸ்பார்க்: சிறுகுறிப்பு

The Mandelbaum Gate, The Prime of Miss Jean Brodie போன்ற தனது நாவல்களுக்காகவே பிரதானமாக அறியப்பட்ட ஸ்காட்லாந்து எழுத்தாளர் மூரியல் ஸ்பார்க் கவிஞராகவே எழுத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேய அம்மாவுக்கும் யூத அப்பாவுக்கும் பிறந்த ஸ்பார்க் பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, அது தனக்கு நாவல் எழுத ஒரு விரிவான பார்வை அளித்திருப்பதாய் அறிவித்தார். இந்த மதமாற்றம் காரணமான மனஸ்தாபம் மூன்று வருடங்களுக்கு முன் 88 வயதில் சாகும் வரை அவரை தன் மகனிடம் இருந்து பிரித்து வைத்தது. வாழ்வின் ஒழுக்கில் ஒவ்வொரு பிடிமானமாக நாடி சென்றுள்ள மூரியலின் எழுத்தின் முக்கிய தேடல் வஸ்து அடையாளம். இங்கு தமிழாக்கப்பட்டுள்ள கவிதைகள் All the Poems என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...