Skip to main content

ஆலன் ஸ்பென்ஸ்: படைப்பு வாழ்வும், பிறவும்

ஆலன் ஸ்பென்ஸ் ஸ்காட்லாந்துக்காரர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் மூலம் உலகளவில் கவனம் பெற்று வருகிறார். முதல் கவிதைத் தொகுப்பு ப்பொளப் ( நீருள் விழும் ஓசை) 1970-இல் வெளியானது. அதற்குப் பின் இரு முக்கிய ஹைக்கூ தொகுப்புகள்: இதயத்தின் பருவங்கள் மற்றும் தெளிந்த வெளிச்சம். இவரது சமீபத்திய நாவலான பரிசுத்த நிலத்தில் ஹைக்கூ மற்றும் தாங்கா கவிதைகள் இடம்பெறுகின்றன.

இவர் ஸ்காட்லாந்திய கலைக்குழு நூல் விருதை மும்முறை பெற்றுள்ளார். 1995-இல் எஸ்.ஏ.சி அவ்வருட ஸ்காட்லாந்திய எழுத்தாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளன்பிடிக் ஸ்காட்லாந்தின் உயிர்நாடி (படைப்பிலக்கியம்) விருதை 2006-ஆம் ஆண்டு பெற்றார். 

ஆலன் ஸ்பென்சின் எழுத்து தினசரி ஈடுபாடுகளிடையே இருத்தலின் புதிருக்குள் தோன்றும் சிறு வெளிச்சத் தெறிப்புகளை பின் தொடர்வது. உலகம் மனத்தின் பிரதிபலிப்பு என்றார் இம்மானுவல் காண்ட். இதயத்தின் பருவங்கள் தொகுப்பு வசந்தம், இலையுதிர்காலம், பனிக்காலம், கோடை எனும் இயற்கை பருவ படிமங்களில் மனத்தின் சுவடுகளை பின்தொடர்கிறது. வாழ்வின் முரண்கள், மாற்றச் சுழற்சியில் சாஸ்வதம் கண்டறிதல், நுட்பத்தின் எளிமை என இவர் எழுத்து தொடர்ந்து பயணிக்கிறது. 

சிந்தனாபூர்வ தியான முறை தரும் பார்வை தன் படைப்பை விரிவடையச் செய்வதாய் சொல்லும் இவர் ஸ்ரீ சின்மய் தியான மையத்தை ஈடின்பர்கில் நடத்தி வருகிறார். அபெர்தீன் பல்கலையின் படைப்பிலக்கிய பேராசிரியராய் பணி. அங்கு நிகழ்த்தப்படும் வருடாந்தர வார்த்தை விழாவின் கலை இயக்குனர்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...