Skip to main content

Posts

Showing posts from May, 2022

இரண்டு உலகங்கள்

நான் கடுமையாக வெறுப்பது ஒரு நாவலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில் , தினமும் பல நூறு சொற்களை அனாயசமாக எழுதிக் கொண்டிருக்கையில் , அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத மற்றொரு வேலையை சில நாட்கள் தொடர்ந்து செய்ய நேர்வதே . அதாவது நாவல் எழுத ஒரு சில மணிநேரங்கள் கூட கிடைக்காதபடி வேலை நெருக்கடி அதிகமாவதே . பயணங்களையும் இதில் சேர்க்கலாம் . திரும்ப நாவலில் விட்ட இடத்துக்குத் திரும்பும் போது மீண்டும் மனநிலை கூடி வர நேரமெடுக்கிறது . பனிமூட்டத்தில் வழி மறைந்து விட்டதைப் போலத் தோன்றுகிறது . ஒன்றிரண்டு நாட்கள் போராடி மீண்டும் சரளமாக எழுத ஆரம்பிக்கலாம் என்றாலும் சில நாட்களை இழந்து விட்ட கோபம் உள்ளிருந்து அரித்துத் தின்னுகிறது .   அதை விடக் கொடுமை என்னவென்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல தினந்தோறும் பற்பல வேலைகளை செய்தபடி மனிதர்கள் இருப்பதைக் காண்கிறேன் , அவர்களுக்கு இதைப் போல எந்த கவலையும் இல்லை , அன்றாட நெருக்கடிகளைக் கையாண்டால் போதுமென இருக்கிறார்கள் . எனக்கு தண்ணீரில் இருந்து ஒரு மீனைப்...

குஜராத் அணி எப்படி வென்றது?

இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் ஆடுதளம், சூழலை தவறாக கணித்து, 190-200 அடிக்கும் நோக்கில் முதல் 7-15 ஓவர்களில் ஆடியது தான்.  இதற்கு தலைவர் சஞ்சு தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் மில்லருடன் இணைந்து 15வது ஓவர் வரை சராசரியாக ஓவருக்கு 7-8 ரன்கள் அடித்திருந்தால் போதும். 110-115 வந்திருப்பார்கள். அங்கிருந்து 165-170 அடிப்பது சாத்தியமாகி இருக்கும். அது இந்த ஆடுதளத்தில் ஒரு நல்ல ஸ்கோரே. பின்னர் குஜராத் அணியினர் பேசும் போது 150க்குள் ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தவே விரும்பினோம், போனஸாக 130க்கு விழுந்து விட்டார்கள் என்றனர். இது அவர்கள் ஆட்டச்சூழலை சரியாக கணித்தார்கள். ஆனால் ராஜஸ்தானோ 190 வேண்டும் என தவறாக எதிர்பார்த்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த தேவையற்ற எதிர்பார்ப்பே அவர்கள் மீது அழுத்தத்தை உண்டு பண்ணியதே சஞ்சு, மில்லர், ஹெட்மெயரின் விக்கெட்டுகள் விழக் காரணமாகியது.  இவ்வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய அணிகள் செய்த தவறு ஆழமாக மட்டையாடி 17வது ஓவரில் 2-3 விக்கெட்டுகளுக்கு மேல் எதிரணிக்கு கொடுக்காமல் இருப்பதே. பெரும்பாலான அணிகள் 12-16வது ஓவருக்குள் தே...

அதிகரிக்கும் குடும்ப கொலைகளும் தீர்வும்

நான் கவனித்த வரையில் இன்று ஐந்து விதமான கொலைகள் குடும்பத்துக்குள் நடக்கின்றன . அவை கீழ்வருமாறு : சொத்துக்கான கொலைகள் கள்ள உறவின் விளைவாக மனைவி கணவனையும் குழந்தைகளையும் கொல்லுவது , காதலனை வைத்து கணவனைக் கொல்லுவது , கணவன் மனைவியை மட்டும் கொல்லுவது . கணவனாலும் கள்ளக்காதலனாலும் நிராதரவான பெண்கள் தம் பிள்ளைகளைக் கொன்று விட்டு தற்கொலை பண்ணுவது ( பெரும்பாலோ ஆற்றிலோ கிணற்றிலோ குதிப்பது ). மனநலம் பாதிக்கப்பட்ட / கடனால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தில் கணவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொல்லுவது ( தற்போதைய பல்லாவரம் கேஸில் நடந்தது ); மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி குழந்தையையும் கொன்றுவிட்டு பெரும்பாலும் தப்பி ஓடவோ தற்கொலை செய்யவோ தலைப்படுவது . இது அரிதாக நடப்பதாலே அதிக கவனம் பெறுவது - கடும் அழுத்தத்தில் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் குடும்பம் மூடநம்பிக்கை , மந்திரவாதம் எனும் ஒரு வலைக்குள் சிக்கிக் கொண்டு ஒருநாள் எல்லாரும் பரஸ்பரம் கொன்று கொள்வது ( ஒருவிதமான கூட்டுத் தற்கொலை ) அல்லது குடும்...