Skip to main content

Posts

Showing posts from November, 2021

அறிவினால் ஏதாவது பயனுண்டா?

நான் அறிவினால் பயனில்லை என்று சொல்லவில்லை , அறிவுக்கு பலனுண்டு என அனைவரும் அறிவோம் ( அதை நாம் பயன்படுத்தாமல் இருப்பது வேறு விசயம் ), ஆனால் அது என்ன பயன் என்று நாம் கேட்பது அவசியம் . உ . தா ., அறிதல் இன்பமளிக்கும் செயல் . ஒரு புதிய செய்தியை அறியும் போது கூட நாம் இன்புறுகிறோம் . அதே நேரம் இச்செய்திகள் நமக்கு ஒரு நிபுணத்துவத்தை தருவதுண்டா ? ஒருவர் அரசியல் செய்திகளை தொடர்ந்து சேகரித்து வருகிறார் ; அரசியல் குறித்த தன் அறிவை பெருக்கிக் கொள்கிறார் . ஆனால் அவரை ஒரு அரசியல் நிபுணர் என்று கூற முடியுமா ? சாதிகளின் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு அனுசரித்து யுக்திகளை வகுத்தால் ஒரு கட்சி தேர்தலில் வெல்ல முடியும் எனும் கருதுகோள் அல்லது நம்பிக்கை ஒரு சிந்தனையாளருக்கு இருக்கலாம் . ஆனால் அந்த நம்பிக்கையை யுக்தியாக மாற்றி நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட சூழலில் நேரத்தில் அதற்கு மதிப்புண்டா என அவர் அறிய முடியும் . ஆக அரசியலுக்கு வெளியே இருக்கும் ஒரு அரசியல் அறிஞர் ஒரு போத...

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - சில கேள்விகளும் பதில்களும்

என்னுடைய “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” நாவல் குறித்து உங்களுக்கு எழக் கூடிய சில கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை கீழே தருகிறேன்: 1) இது எம்மாதிரியான நாவல்? இது ஒரு துப்பறியும் நாவல். பின்நவீன பாணியில் (வாசிப்புக்கு முடிந்தவரை இடைஞ்சல் இல்லாமல் சரளமாக) எழுத முயன்றிருக்கிறேன். 2) இது துப்பறியும் நாவலா? இலக்கிய நாவலா?  இந்நாவலின் உள்ளே நீங்கள் பயணிக்கும் போது அதற்கு வெளியே உள்ள கதைத்தளத்துக்கு அப்பால் இது மனிதனின் தன்னிலையானது எப்படியானது, நம்மை அறிவதில் நமக்குள்ள போராட்டம் என்ன என்பதைப் பற்றியும் பேசி இருக்கிறேன். ஆக இது வெறுமனே ஒரு மேலோட்டமான துப்பறியும் நாவல் அல்ல. என்னதான் ஒரு வெகுஜன வடிவத்தில் சங்கதிகளைக் கொண்டு சுவாரஸ்யமான கதையை இது சொன்னாலும், சற்று கவனித்து ஆழமாக படிக்க வேண்டிய இலக்கிய பிரதியாகவே இந்நாவல் இருக்கும். 3) இது உண்மைச் சம்பவத்தின அடிப்படையில் எழுதப்படதா? எல்லா துப்பறியும் நாவல்களிலும் பிரசித்தமான நிஜ வழக்குகளின் சாயல் இருக்கும். இந்நாவலிலும் அது உண்டு. ஆனால் இது ஒரு நிஜமாக நடந்த வழக்கை ஆவணப்படுத்தும் முயற்சி அல்ல. மாறாக, நிஜத்தில் வெளிவராத உண்மைகளை என் கற்பனையை...

Bynge செயலி

  Bynge செயலியை பயன்படுத்தாதவர்கள் அதைத் தரவிறக்கி வாசித்துப் பார்க்கவும்.  ரொம்ப அழகான முறையில் வடிவமைத்திருக்கிறார்கள். விளம்பரம் போன்ற எந்த இடையூறுகளும் இன்றி ஒரு புத்தகத்தைப் போல படிக்க முடிகிறது. தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் தொடர்கள் இலவசமாக இதில் கிடைக்கிறது. இப்போது நானும் “ஒரு முடிவற்ற துப்பறியும் கதையுடன்” அப்பட்டியலில் சேர்ந்திருக்கிறேன். இன்று மாலை தொடர் ஆரம்பிக்கிறது. படியுங்கள். https://play.google.com/store/apps/details?id=com.bynge.story

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - இன்று முதல்…

 அன்பு நண்பர்களே, வாசகர்களே (இருவருமே ஒன்று தான் என்றாலும்) இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய புதிய நாவல் தொடர் “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” BYNGE செயலியில் கால்தடம் பதிக்கிறது. ஒவ்வொரு வாரமும் சில அத்தியாயங்கள் விதம் வெளியாகும். நான் புனைவாக எழுதும் முதல் தொடர் இது. உங்களுடைய மகத்தான ஆதரவைத் தந்து தொடர்ந்து இதை விவாதித்து, பரிந்துரைகளை எனக்குத் தந்து இம்முயற்சியை செறிவாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு படைப்பும் வாசகன் கையில் எடுக்கும் போது மட்டுமே நிறைவு பெறுகிறது. இப்படைப்பும் அவ்வாறு முழுமை பெறும் என நம்புகிறேன்.

ஒரு ‘சாதியவாதியை’ வெறுக்க வேண்டுமா? - எழுத்தாளர்களை, கலைஞர்களை முன்வைத்து

“ வளையாத   மூங்கிலில்   ராகம் வளைஞ்சு   ஓடுதே ” பழனிபாரதி ஒரு  ‘ சாதியவாதியை ’  வெறுத்து   ஒதுக்க   வேண்டுமா ? கூடாது .  ஏனென்று   சொல்கிறேன் . ஒரு   கருத்து   நிலையை   எதிர்க்க   வேண்டுமே   ஒழிய   அதைப்   பேசுகிற   தனிமனிதனை   அல்ல   என்பது   என் நிலைப்பாடு  ( அரசியல்வாதிகள்   மட்டுமே   இதில்   விதிவிலக்கு ).  உ . தா ., ‘ சாதியம் ’, ‘ மதவாதம் ’  போன்றவை கருத்துநிலைகள் ,  அவற்றை   பேசுகிற ,  பின்பற்றுகிறவர்கள்  ‘ சாதியவாதிகளோ ’ ‘ மதவாதிகளோ ’  அல்ல .  அவர்களுடைய   செயல்களைத்   தொடர்ந்து   கவனித்தால்   அதற்கு   முரணான   பல   கருத்துக்களையும்   அவர்கள் கொண்டிருப்பதை   நாம்   அறிய   முடியும் .  நான்   முன்பு   டிவி   விவாதங்களில்   கலந்து   கொண்டிருந்த   போது தீவிரமான   மதவாதிகளுடன்   மேடையில்   மோதியிருக்கிறேன் ,  ஆனால் ...