Skip to main content

Posts

Showing posts from July, 2019

பிளாஸ்டிக் சிரிப்புகளின் காலம்

நான் முன்பு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப எழுத்து பிரிவில் , ஒரு சின்ன வேலையில் , இருந்தேன் . எந்திர பாகங்கள் , மின்னணு கருவிகள் குறித்த விவரணைகளே புரியாமலே புரிந்த மாதிரி எழுதுவது என் பணி . என் அயலில் மற்றொரு துறை இயங்கியது . முழுக்க மென்பொருள் கோடிங் சார்ந்த ஒரு புரோஜெக்ட் . அதில் சிறு சிறு பிரிவாக ஏகப்பட்ட பேர் இயங்கினர் . அவர்களில் ஒருவர் - ஒரு வங்காளி - எனக்கு கேண்டீனில் வைத்து நட்பானார் . நான் அவரை இறுதியாக சந்தித்ததும் கேண்டீனில் தான் . அன்று எதையோ தொலைத்தது போல தனியாக அமர்ந்திருந்தார் .  “ என்ன ஆச்சு ?” என வழக்கம் போல கேட்டேன் . வழக்கம் போல அவர் தன் சின்ன சின்ன பிரச்சனைகளை , தனிமையைப் பற்றி புலம்புவார் . நான் இத்தகைய புலம்பல்களை ரசிப்பேன் . “I am fine” என் சிரித்தபடி தோள் உலுக்குகிறவர்களை விட இத்தகையோர் நேர்மையானவர்கள் என நினைப்பேன் . அவர் அன்று விச்சிராந்தியாக பதில் சொன்னார் , “ எனக்கு வேலை போயிடுச்சு !” ஏன் , எப்படி என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை . ஆறுதல் சொல்லவி...

அத்திவரதரும் இந்துத்துவ அரசியல் கனவும்

அத்திவரதர் வைபவம் , அது சம்மந்தமான பரபரப்பு பற்றி சரவணன் சந்திரன் எழுதிய பதிவைப் படித்தேன் . அவர் அப்பதிவை அழகாக எழுதியிருந்தாலும் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை . அப்பதிவு பல பாஜகவினர் மற்றும் நடுநிலை சங்கிகளின் மார்பில் பாலை வார்த்திருக்கும் என்பதாலே இங்கு மாற்றுக்கருத்தை கூற விழைகிறேன் .

பிக்பாஸ்: சேரனுக்கு எதிரான மீராவின் பாலியல் குற்றச்சாட்டு (2)

அந்த வீட்டில் சேரன் தன்னை பொருட்படுத்தியதோ கவனித்ததோ இல்லை என இந்த குற்றச்சாட்டின் இடையே ஓரிடத்தில் சொல்கிறார் . இது ஒரு முரணான கூற்று . அதாவது சேரனுக்கு மீராவிடம் பாலியல் ஈடுபாடு இருந்திருந்தால் அவர் அவரை தவறாக தொட்டிருக்க வாய்ப்புண்டு . தன்னை எந்தவிதத்திலும் பிடிக்காத , வெறுக்கிர ஒருவர் என அவர் சேரனை சித்தரிக்கும் பட்சத்தில் சேரன் “ அப்படி ” ஏன் செய்ய வேண்டும் ? சரி இது எப்படியோ போகட்டும் . தன்னை ஒருவர் வெறுப்பதாய் ஒரு பெண் உணரும் பட்சத்தில் இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பாரா ? சில பெண்கள் செய்வார்கள் என்பதற்கு மீராவே உதாரணம் .

பிக்பாஸ்: சேரனுக்கு எதிரான மீராவின் பாலியல் குற்றச்சாட்டு (1)

பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் விளையாட்டின் பகுதியாக ஓடிச் செல்லும் மீராவை சேரன் தடுத்து அவர் தோளைப் பற்றி தள்ளி விடுகிறார் . விளையாட்டின் இந்த நியதியை ஏற்று மீராவும் சேரனுக்கு ஹை பை கொடுக்கிறார் . ஆனால் இதையடுத்து வீட்டிலுள்ளோரிடம் மீரா பேசும் போது தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக புலம்புகிறார் . சேரன் தன்னை இடுப்பைப் பிடித்து தள்ளி விட்டதாக அதனால் தான் காயப்பட்டதாக ( வலி ஏற்பட்டதாக ), அவரது தொடுகை தப்பாக பட்டதாக சொல்கிறார் . பெண்களிடம் கண்ணியமாகவே நடந்து கொள்வேன் எனக் கோரும் சேரன் இப்படி தன்னிடம் பண்ணலாமா என்பதே அவரது கோரல் . தனது கூற்று மீது மீராவுக்கு சற்று குழப்பம் இருந்திருக்க வேண்டும் . தான் சரியாக வெளிப்படுத்தவில்லையோ எனத் தோன்றியிருக்கலாம் . ஆகையால் அவர் பின்னர் சாண்டியிடம் நடந்த சம்பவத்தை நிகழ்த்தி காட்டினார் .

எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)

” நான் ஒரு போன் பேசத் தான் வந்தேன் ” எனும் தலைப்பில் மார்க்வெஸின் ஒரு அட்டகாசமான சிறுகதை உண்டு . ஒரு நெருக்கடியான சந்தர்பத்தில் தொலைபேசியில் பேசும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனைக்கு செல்லும் பெண் அங்கேயே மாட்டி பைத்தியமாக கருதப்பட்டு சிறைவைக்கப்படும் கொடூரத்தை அக்கதை சித்தரிக்கும் . பல சமயங்களில் இலக்கிய பாராட்டு விழாக்கள் அப்படித் தான் அமையும் . எழுத்தாளனைப் பார்த்தால் ரொம்ப மரியாதையுடன் “ நானும் எழுத்தாளன் தானுங்க ” என பீடிகை போடுகிறவர்களிடம் காட்டிக் கொள்ளவே கூடாது . விக்கிரமாதித்யன் தன்னை ஒரு அமைப்பு விருது தருகிறேன் என அழைத்து நாற்சந்தியில் கூட்டம் போட்டு நள்ளிரவு வரை அதன் ஒருங்கிணைப்பாளர்களே மைக்கில் முழங்கி சுயவிளம்பரம் பண்ணி விட்டு பேருந்துக்கு கூட பணம் தராமல் நடுரோட்டில் கைவிட்ட கதையை ஒரு பேட்டியில் சொல்கிறார் . இலக்கிய ஆர்வலர்களில் வெள்ளாந்தியானவர்கள் நல்லவர்கள் , சுயமோகிகள் கடித்து வைக்கும் பைத்தியங்களைப் போன்றவர்கள் - இவர்களிடையே வேறுபாடு கண்டு தப்பிக்க தெரிய வேண்டும் .

எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1)

இந்த கேள்வியை முன்னிட்டு , ஜெயமோகன் சமீபத்தில் எழுதியுள்ள விரிவான கட்டுரை - “ எழுத்தாளனும் சாமான்யனும் ” முக்கியமானது (https://m.jeyamohan.in/124194#.XTqKMsrhWhA). எழுத்தாளனின் கொள்கைநிலை விளக்கமாக அதை பார்க்கிறேன் . ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் அதைப் படிக்க வேண்டும் . தமிழகத்தில் எழுத்தாளர்கள் அந்நியப்படுவதை , பொருளியல் , பண்பாட்டு ஆதரவின்றி சிறுமைப்படுவதை , ஒடுக்கப்படுவதை ஜெயமோகன் குறிப்பிடுகிறார் . அறிவுத்தளத்தை ஒரு சமூகம் பொருட்படுத்தினால் அது எழுத்தாளன் உள்ளிட்ட அறிவுத்தள / கலை செயல்பாட்டாளர்களுக்கு தனி இடமொன்றை அளிக்கும் . இந்த செயல்பாட்டாளர்களே ஒரு சமூகத்தின் ஆன்மாவாக , கனவுகள் பிறக்கும் நிலமாக திகழ்பவர்கள் . சமூகத்தின் அறம் என்பது இந்த படைப்பு , அறிவுசார் குரல்களில் மையம் கொண்டிருக்கும் என்பது ஜெயமோகனின் கூற்று .

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (3)

மிஷிமாவுக்கு மன்னர் மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சி மீது மயக்கமோ இல்லை . ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம் , எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி , ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை , பாண்பாட்டு வேர்கள் அறுக்கப்பாட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை , அவர் மீதான வழிபாட்டை , ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார் . இந்த செப்புக்கு மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது ஹைடெக்கார் தனது தத்துவத்தில் பேசியது தான் . நீட்சே ஜெர்மனியில் இருந்தபடி “ கடவுள் இறந்து விட்டார் , மீ — மனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகாமையில் உள்ளது ” என அறைகூவியது தான் .