Skip to main content

Posts

Showing posts from February, 2019

மணிரத்னத்தின் திரைமொழியை விவாதிக்கும் தொடர் - 2

அர்ஜுன் (அரவிந்த் சாமி) மாவட்ட ஆட்சியாளர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தினம் தினம் தீர்வு காணும் ஒருவர் - மக்களோடு நெருங்கிப் பணி செய்ய வேண்டியவர். அவரை இன்னும் ஹீரோயிக்காக நிறுவியிருக்கலாமே மணிரத்னம், ஏன் இப்படி போர்வெல் போட்டு தண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்ப விஷயத்தைச் சாதிப்பவராய் காட்டுகிறார் என நான் இளவயதில் இந்தப் படத்தைப் பார்த்தபோது யோசித்திருக்கிறேன் (தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சாதாரண விஷயம் என்றில்லை – ஒரு பேரழிவின்போது மக்களைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு சந்தர்ப்பம் அல்ல இது என்கிற அளவில் சொல்கிறேன்). ஆனால், சமீபத்தில் இக்காட்சியைக் கண்டபோது எவ்வளவு கவித்துவமான நுண்ணிய காட்சி அமைப்பு இது என விளங்கியது. அர்ஜுன் என்ன மாதிரியான மனிதன் என சுலபத்தில் இந்தக் காட்சிகள் நிறுவுகின்றன - அதாவது உருவக ரீதியாய்.

மணிரத்னத்தின் திரை மொழியை விவாதிக்கும் தொடர் - 1

“தளபதியின்” திரைக்கதை கச்சிதமானது. இதைப் பற்றி முதலில் பார்ப்போம். சிட்பீல்ட் தனது திரைக்கதை குறித்த நூலில் ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்துகிறார்: ஓர் இயக்குநர் தனது படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்குள் அந்தப் படத்தின் ஆதாரமான பிரச்சினை, தொனி, மனப்பாங்கை பார்வையாளனுக்குக் கடத்திவிட வேண்டும். அப்போதே பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார்வார்கள்; கவனம் சிதறாமல் ரசிப்பார்கள். மணிரத்னம் ‘தளபதி’யின் முதல் பத்து நிமிடங்களுக்குள் அதன் மையக்கருவை உணர்த்திவிடுகிறார். அறியா வயதில் கர்ப்பிணியான ஒரு சிறுமி தன் பிள்ளையை வளர்க்கும் துணிவின்றி, சமூக விலக்கத்துக்குப் பயந்து ஒரு கூட்ஸ் தொடர்வண்டியில் விட்டுவிடுகிறாள்; ஆனால் அடுத்த நிமிடமே அதற்காக வருந்தி குழந்தையை மீட்க முயல்கிறாள்; குழந்தையைத் தொடர்வண்டி கொண்டு சென்றுவிடுகிறது. சேரியில் வசிக்கும் ஒரு பாட்டி அக்குழந்தையைத் தத்தெடுக்கிறாள். தன்னை ஏன் தன் அம்மா கைவிட்டாள் எனும் கேள்வி அப்பையனை அலைக்கழிக்கிறது. அவன் தன் தத்து அம்மாவிடம் “என்னை ஏன் கூட்ஸ் வண்டியில் போட்டுட்டாங்க?” என்ற கேள்வியை, எல்லா வேதனைகளையும் உள்ளே அழுத்தியபடி, கேட்கிறான். அந்தப்...