அசோகமித்திரனிடம் வன்முறை இல்லை என்று சுந்தரரமசாமி ஒருமுறை கூறினார். வன்முறை என்று அவர் சொன்னது அடிதடியோ ரத்தமோ அல்ல; தமிழ் பின்நவீனத்துவ எழுத்தில் பார்க்கும் மிகை-ஆர்வமான ஒழுக்கமீறலையோ கூட அல்ல. நமது தினசரி கலாச்சாரத்தில், மனம் சிந்தனையாக செயலாக மறைமுகமாக வெளிப்படும் விதத்தில் உள்ள வன்மத்தை சொன்னார்.