நீங்கள் நம்ப மாட்டீர்கள் மிகக் குறைந்த சச்சரவு அல்லது துயரத்துடன் வாழ்ந்து செல்லும் நபர்கள் உள்ளார்கள். நன்றாக ஆடை அணிவார்கள், உண்பார்கள் தூங்குவார்கள். தாம்பத்திய வாழ்வில் திருப்தியாக இருப்பார்கள்.
கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன.
தமிழில் ஆரம்பத்தில் ஒரே ஒரு மகாகவிஞன் இருந்தான் அவன் பெருந்தனிமையில் ஒரு துர்கனவில் தனக்குத்தானே பேசி தன்னிடமே முரண்பட்டு தன்னையே மன்னித்து மறைவாய் தனக்கே குழி பறித்து கடவுளிடம் தன்னை காப்பாற்ற மன்றாடினான்
அஸ்தமனத்தில் காலடிகளை வெதுவெதுப்பாக்கு படுக்கைக்கு நாம் போகுமுன் ஓரியனின் ஒளியில் உன் புத்தகம் படி சிரியஸ் தலையருகே காவல் நிற்க பிறகு எம்பி, கோள்களை அணைத்திடு
நேரடி ஒளிபரப்பு துவங்காத ஒரு காலத்தில் அனைத்து அணிகளுக்கும் ஒரு கொடுங்கனவாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுப்பயணங்கள் மெல்ல மெல்ல சிரமமான தொடர்களாக மாறி பின்னர் இப்போது ஒரு எளிய சுற்றுலாவாக முடிந்து விட்டது.
குழந்தைமையை, அதன் பரிசுத்த நிலையை அல்லது லயிப்பை பேசும் கவிதைகள் அல்ல முகுந்த் நாகராஜன் எழுதுவது. அவரது கவிதைகள் வாழ்வின் மற்றொரு முக்கியமான கலாச்சார சடங்கை காட்டுகின்றன. அன்றாட உறவாடல்களில் இருந்து சமூகம் கடவுள் பிரபஞ்சத்திடம் வரை நாம் மேற்கொள்ளும் விளையாட்டுத்தனம், ஏமாற்றுகள், தந்திரங்கள், இவற்றின் குழந்தைமை.
இங்கிலாந்து கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோலோச்சியது. அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கூட லார்ட்ஸ் பெவிலியனில் அனுமதிக்கப்படாத அவமதிப்புகள் நடந்ததுண்டு. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா தன் ஆட்டத்தரம் மற்றும் அணி விழுமியங்கள் கொண்டு பத்து வருடகாலம் மேலாதிக்கம் செலுத்தியது. இந்த ஒரு நூற்றாண்டு வெள்ளை ஆதிக்கம் ரெண்டாயிரத்துக்கு பிறகு குறிப்பிட்ட வகையில் மாறியது.
தமிழில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரு உத்தேசங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளனை வெளிச்சத்துக்கு கொண்டு வருதல். அல்லது ஏற்கனவே வெளிச்சத்தில் டாலடிக்கும் ஒருவரை மேலும் அங்கீகரித்தல். எப்படியும் வெளிச்சம் நல்லது தான்.