Skip to main content

Posts

Showing posts from February, 2024

நாவல் எனும் ஒப்பற்ற சாதனை

ஒரு எழுத்தாளராக நான் எழுத்துக்குள் இன்னின்ன விசயங்களை கையாள்பவன், இன்னின்ன உணர்வுத்தளங்களில், கருத்து நிலைகளில் இந்த உலகுடன் உரையாடுபவன் என்று என்னைப் பற்றி சொல்வேன். அதுவே ஒரு எழுத்தாளராக எனது தன்னிலை. ஒரு எழுத்தாளர் ஆகும் போது நான் முற்றிலும் இன்னொரு மனிதன் ஆகிறேன். ஒரு நாவலாசிரியராக அதற்கும் மாறான ஒரு தன்னிலையை நான் பூணுகிறேன். இதில் நான் கையாள்கிற பிரச்சினைகள், கொந்தளிப்புகள், தவிப்புகள், அல்லாட்டங்கள், ஊசலாட்டங்களை நான் நடைமுறையிலோ அல்லது ஒரு அபுனைவு எழுத்தாளனாகவோ நான் எதிர்கொள்வதில்லை. வேறெங்கும் வேறெப்போதும் சாத்தியமில்லாத மன சஞ்சாரங்களை ஒரு நாவலுக்குள்ளே நாம் காண்கிறேன். அது நம்மை விகாசிக்க வைக்கிறது. நம் ஈகோவைத் தளர்த்துகிறது. கருணையுடன் மற்றமையை நோக்க வைக்கிறது. ஒரு ஆன்மீகப் பயிற்சியாகிறது. அதனாலே நாவலைப் படைப்பது ஒப்பற்ற சாதனையாகிறது. நாவல் வகுப்பில் கலந்து கொள்ள 9790929153  

நாவலாசிரியர் எனும் சூப்பர் மேன்

  ஒரு நாவலை எழுதும் ஒவ்வொருவரும் சூப்பர் மேன், சூப்பர் வுமன் தான். அவர்கள் காலத்தையும் வெளியையும் மீறி சென்று புதிய உலகையும், அதற்கான நியாயங்கள், காலங்களையும் உருவாக்குகிறார்கள். தம் பாத்திரங்களின் உள்ளும் புறத்தையும் அறிந்திருக்கிறார்கள். பத்து சிக்கலான வாழ்க்கைகள் ஒன்றையொன்று சந்திக்கும் போது எப்படியான மாற்றங்கள் நேரும் எனத் துல்லியமாக தெரிந்திருக்கிறார்கள். அதனாலே நீட்சே குறிப்பிட்ட அதிமனிதன் குறித்த விளக்கம் நாவலாசிரியர்களுக்கே பொருந்தும் என நினைக்கிறேன். நாவல் வகுப்பில் இணைந்து அடிப்படையான உத்திகளையும் எழுத்திற்கான அகப்பயிற்சியையும் பெறுங்கள். தொடர்புக்கு 9790929153

இது லாலாலலா காலம்

அண்மையில் நடந்த யுவனுக்கான விஷ்ணுபுரம் விருது விழாவின் (2023) அமர்வு ஒன்றில் ஜெயமோகன் தன்னிடம் இன்றைய இணையதளங்களால் ஒரு விமர்சன மரபை ஏன் உருவாக்க முடியவில்லை என்று கேட்டதாக சொல்லி அதற்கு தான் யோசித்துக் கண்டடைந்த பதில் என ஒன்றை க . விக்னேஸ்வரன் ( கனலி இணைய இதழ் ஆசிரியர் ) தன் பேஸ்புக் தளத்தில் எழுதியிருந்தார் . அதில் அவர் முந்தைய விமர்சன மரபு எப்படி நிறைய தியாகங்கள் , கருத்து மோதல்கள் மத்தியில் ஒரு முரணியக்கமாக தோன்றியது எனக் குறிப்பிட்டு இன்று அதற்கான தேவை ஏற்படவில்லை என்று கூறியிருந்தார் . அதைப் படித்த போது எனக்கு மற்றொரு பதில் தோன்றியது : இன்று ஏன் விமர்சகர்களும் திறனாய்வாளர்களும் தேவையில்லை எனப் பரவலாக ஒரு சிந்தனை இருக்கிறதெனில் இது நம் மண்ணில் தோன்றியுள்ள இலக்கிய நுகர்வுக் காலத்தின் முதற்கட்டம் . ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எப்படியெனத் தெரியவில்லை , ஆனால் தமிழகத்தில் விமர்சனம் , மதிப்புரை போன்ற வஸ்துக்கள் சிரசேதம் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு விட்டன . விமர்சகர்கள் செயற்கையான மேற்கத்த...