Skip to main content

Posts

Showing posts from May, 2023

90களின் தமிழ் சினிமா: சமூக மாற்றங்களின் அடையாளம் - அரவிந்த்

  உலகின் பெரும்பாலோரின் பொழுதுபோக்கான சினிமாவை வெறும் மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக ஊடகமாக ஒதுக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி என் மனதில் வெகு நாள் இருந்தது.  ”அக்காலத்தில் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் என்றால், எனக்கு இன்று சினிமா’” என எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பலமுறை கூறியதிலிருந்து அனைத்துக் கலைகளின் சங்கமமான சினிமாவின் முக்கியத்துவம் புரிகிறது.  நம்மால் மாற்ற முடியாத சமூகப் பிரச்சனைகளுக்கு அடுத்தவரைக் குறை சொல்லும் நம் உளவியல் அனைத்து தவறுகளுக்குமான ஊற்றுக் கண்ணாக சினிமாவையே எண்ணுவதால் அதை என்னால் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  நம்மையும், நம் பண்பாட்டையும் அறிய முயலும் வெளி நாட்டாருக்கு எளிய சாதனமாக இருப்பது சினிமா என்ற நிலையில், அதைப் பற்றி மேலும் சிந்திக்கவும் ஆராயவும் ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழ்வது யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், ஆங்கிலப் பேராசிரியருமான திரு ஆர். அபிலாஷ் அவர்களின் ”90களின் தமிழ் சினிமா” நூல்.  சினிமா என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என எண்ணும் நமக்கு, 90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திரு...

சில விதைகள் முளைத்தே ஆகும்

கவிதை, நாவலுக்கு மட்டுமல்ல கட்டுரை எழுதுவது, சமூக வலைதளங்களில் சந்தைப்படுத்துவது துவங்கி சும்மா கதை சொல்வதற்கு வரை உலகம் முழுக்க பல்கலைக்கழகங்களில் 1970களில் இருந்தே வகுப்புகள் நடந்து வருகின்றன. இவற்றில் சேர்ந்து எழுத்து முறைமையின் அடிப்படைகளை கற்றுக் கொள்கிறார்கள். விழுந்து அடிபட்டு நீண்ட காலமாக அனுபவத்தின் வழி அறிவதை சுலபத்தில் குறுகின காலத்தில் அறிகிறார்கள். இது நல்லது தானே! ரேமண்ட் கார்வர், கெர்ட் வொனெகட், பிலிப் ராத், ஜான் இர்விங், ஜெ.டி சாலிங்கர், லோர்க்கா, ஜேக் கெரவக், லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஆன் சாக்ஸ்டன், சில்வியா பிளாத், ராபர்ட் லாவல், ஹா ஜின், ஸேடி ஸ்மித் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்களில் MFA Creative Writing பாடங்களை கற்றுக்கொடுக்கும், கற்றுக்கொடுத்த மகத்தான படைப்பாளிகள். சமகாலத்து படைப்பாளிகள் பலரும் அங்கு படைப்பாக்க கலை ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள். நான் அண்மையில் இங்கிலாந்தை சேர்ந்த படைப்பிலக்கிய பேராசிரியர்கள் சிலரை சந்தித்த போது அங்கு இலக்கியத்தை விட எழுத்துக் கலையை கற்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக...

நாவல் எழுதும் பயிற்சி

பயிற்சியாளர் விபரம் : ஆர் . அபிலாஷ் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு புனைவெழுத்தாளர் . சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் மற்றும் பாஷா பரிஷத் உளிட்ட விருதுகளைப் பெற்றவர் . 40 க்கும் மேற்பட்ட நாவல் , சிறுகதை , கவிதை , மொழிபெயர்ப்பு , நாடகம் மற்றும் கட்டுரை நூல்களை எழுதியவர் . இவர் ஒரு தொழில்முறை ஆங்கில பேராசிரியர் ஆவார் . இவர் ஆங்கிலத்தில் நாவல் எழுத்துக்கலை வகுப்புகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழக அளவில் நடத்தி வருகிறார் . நாவல் எழுதும் கலை குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார் . இவரைப் பற்றி மேலும் அறிய : https://ta.wikipedia.org/wiki/ ஆர் ._ அபிலாஷ் ஆர் . அபிலாஷ் ஒரு கல்வியாளர் . அவர் நாவல் எழுதும் கலை வகுப்புகளை நடத்தி அனுபவம் பெற்றவர் . அடிப்படையான தகுதி : தமிழில் ஒரு சில பத்திகளாலான ஒரு புனைவை எழுதி அனுப்ப வேண்டும் . அது ஒரு கதை அல்லது அத்தியாயத்தின் பகுதியாக இருக்கலாம் . அதை நீங்களே சுயமாக எழுதியிருக்க வேண்டும் . குறைந்தது 250 வார்த்தைகளில் இருந்து அதிகம் எவ்வளவு சொற்கள் வேண்டுமெனிலும் இருக்கல...