Skip to main content

Posts

Showing posts from May, 2021

மாடுகள் இல்லாவிட்டாலும் மாட்டுக்கறி தடை

இன்றைய ஆங்கில ஹிந்து நாளிதழின் நடுப்பக்க கட்டுரையான "A Reform Wave Lakshadweep Could Do Without"இல் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லா ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தருகிறார். லட்சத்தீவுகளில் பிரபுல் படேல் அறிமுகப்படுத்தும் " சீர்திருத்தங்களில்" ஒன்று மாட்டுக்கறி தடை. இத்தனைக்கும் லட்சத்தீவுகளில் அரசின் பண்ணைகளில் தவிர எங்குமே மாடுகள் இல்லை. இந்த அரசின் கொள்கைகளில் மதவெறி எந்தளவுக்கு ஆழமாக இறங்கி உள்ளது பாருங்கள்; குறைந்த அளவுக்கு மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் உள்ள மாநிலங்களில் பாஜக மாட்டுக்கறி தடை கொண்டு வரும் நோக்கம் அந்த உணவை சாப்பிடுவதாக நம்பப்படும் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி சட்டவிரோத கும்பலாகக் காட்டத் தான். அண்மையில் கர்நாடகாவில் மாட்டுக்கறி தடைச்சட்டம் கொண்டு வந்தார்கள், வயதான மாடுகளைத் தான் கறிக்கு விற்க வேண்டும் என்றார்கள். ஆனால் சட்டத்துக்குப் பிறகும் மாட்டுக்கறி அதே போலக் கிடைக்கிறது. அது யார் புண்ணியத்தால் எனத் தெரியவில்லை. நல்லவேளை உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நாம் காண்பது போன்று மாட்டுக்கறியை வீட்டில் வைத்திருந்ததற்காக மக்களை அடித...

மோடியின் எதிர்காலம்

  எங்கள் பக்கத்து தெருவில் எங்களை ஒட்டின வீட்டில் இருப்பவர் ஒரு மார்வாரி .  பால்கனியில் இருந்து பார்த்தாலே அவரது வீடு தெரியும் . அவர் சிறிய அளவிலான வணிகர் . ராஜஸ்தானை சேர்ந்தவர் . தீவிர மோடி பக்தர் . கடந்த ஆண்டு கொரோனாவை விரட்டும் முயற்சிகளில் ஒன்றாக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்பது மணிக்கு அந்த தெருவே விளக்கணைத்து அகல்விளக்குகள் , மெழுகுவர்த்திகள் ஏற்றியது . தட்டுகளால் ஓசையெழுப்பி கோ கொரோனா என ஆர்ப்பரித்தது . எங்கள் வீட்டில் மட்டுமே அந்த திருப்பணியை யாரும் செய்யவில்லை . அப்போது அந்த நபர் என்னிடம் சிநேகமாக கடிந்து கொண்டார் . “ நீங்கள் ஏன் மெழுகுவர்த்தி கூட ஏற்றவில்லை ?” நான் பதிலளிக்காமல் புன்னகைத்து விலகிக் கொண்டேன் . இந்த வருடம் இரண்டாவது அலையின் போது ஊரில் அவருடைய உறவினர்களே நோய்த்தொற்றில் மடிந்து விட்டார்கள் . அவருக்கும் மோடி மீதிருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்து விட்டது . தில்லியில் 16,000 கோடிக்கு மோடி மாளிகை கட்டுவது பற்றி பேசிக் கொண்டிருந்த போது சோர்வாக “ அடுத்த தேர்தலில் மோடி ஜ...