Skip to main content

Posts

Showing posts from May, 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 3

தடக்காற்று கடுமையாய் வீசியதால் , ஆற்றுத்துறைமுகத்தில் அம்மாவை படகில் ஏற சம்மதிக்க செய்ய நான் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மாவிடம் நியாயமில்லாமலும் அல்ல. நியு ஓர்லியன்சிலிருந்து வரும் நீராவிப் படகுகளின் குறுகிய மாதிரி வடிவமான இந்த படகுகளின் கேசொலின் எந்திரம் ஜுர நடுக்கத்தை படகின் மேலுள்ள எல்லாவற்றின் மேலும் கடத்தி விடக் கூடியவை.

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 2

நான் வேலை பார்த்த செய்தித்தாள் அலுவலகத்தில் பணம் கிடைக்க வாய்ப்பே இல்லை. அலுவலக எழுத்தாளர்கள் விடுப்பில் செல்லும்போது மூன்று பிசோக்களுக்கு தினசரி உரையும் , நான்கு பிசோக்களுக்கு தலையங்கமும் எழுதும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கும் ; ஆனால் அது ஏதோ உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாய் இருந்தது.

கதை சொல்ல வாழ்கிறேன்:அத்தியாயம் 1

வாழ்க்கை ஒருவர் வாழ்ந்ததல்ல , சொல்வதன் பொருட்டு எதை மற்றும் எப்படி நினைவுபடுத்துகிறோமோ அதுவே