Skip to main content

Posts

Showing posts from May, 2024

"ரசிகன்" நாவல் குறித்து

"ரசிகன்" நாவலுக்கு ஒரு வாசகர் கடிதம். விஜயகுமாருக்கு நன்றி! சாதிக்கைப் போன்றவர்களை நான் அடிக்கடி காண்கிறேன் - தம்மையே வதைத்துக் கொள்பவர்கள், கிடைத்த வரத்தை தட்டிக் கழித்து தம்மை மேலும் மேலும் அழித்துக் கொள்ள விரும்புகிறவர்கள்.

நவீன கவிதையில் மெய்ப்பாடு - அழுகையும் மருட்கையும் - ஆர். அபிலாஷ்

  இன்றைய நாவல் வகுப்பின் போதான தொல்காப்பிய விவாதத்துக்கு தயாரித்த குறிப்பு இது. மெய்ப்பாட்டின் நுணுக்கங்களை பண்டைய, நவீன கவிதைகளை வைத்து விளக்க முயன்றிருக்கிறேன்.: மெய்ப்பாடு என்பது மெய்யில் வெளிப்படும் உணர்ச்சி. மெய்யுணர்ச்சி, உடலுணர்ச்சியாகும் அகவுணர்வு. நமது அகத்துக்கும் புறத்துக்குமான இருமையை ஏற்காத தொல்காப்பியம் (உதாரணத்திற்கு சொல்வதானால்) பிரிவு எனும் துயரை இந்த உடலால் மட்டுமே அறியப்படவும் முடியும் என்கிறது. இவ்வாறு நாம் உணர்வுகளை உணர்ச்சிகளாகக் கண்டு அவற்றை மெய்ப்பாடாக கருதியதற்கு நமது சங்கக் கவிதைகள் ஒரு காலத்தில் நிகழ்த்து கலையாக இருந்தமை காரணமாகலாம் பிரசிடென்ஸி கல்லூரியின் பேராசிரியர் ஶ்ரீனிவாசன் கூறுகிறார். அல்லது இதுவே தமிழர்களின் ஆதி மெய்யியலாகவும் இருக்கக் கூடும். தன்னைக் கடந்து உடலற்ற ஒரு ஆற்றலை நோக்கி ஏகாமல், அந்த சுய தாவலில் ஒரு அனுபூதியைக் கொள்ளாமல், தன் பௌதீக உண்மையே தனது மெய் எனக் கருதும் ஒரு போக்கு இங்கு வலுவாக இருந்து, அதன் மெய்யியல் வடிவமாக மெய்ப்பாட்டியல் ஒரு கலைக்கோட்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். தொல்காப்பியத்தின் ஒன்பது இயல்களில் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல்...

எதேச்சதிகாரம் பின்னிய வெறுப்பின் லவ் ஜிகாத்தும் மக்கள் பின்னிய அன்பின் லஹ் ஜிகாத்தும்

நரேந்திர மோடி அரசின் பல வினோத செயல்திட்டங்களை , அவற்றின் அடிப்படையிலான பொய்ப் பிரச்சாரங்களைப் புரிந்துகொள்ள நாம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பான ஹிட்லரின் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும் . நாஜி கட்சியின் ஒரு மேம்படுத்தப்பட்ட , தந்திரமான , தொழில்நுட்ப திறன் படைத்த அவதாரமாகவே மோடியின் பாஜக உள்ளது . குறிப்பாக லவ் ஜிகாத் .   முதலில் சாதி , மதத்துக்கு வெளியிலான காதல் , திருமணங்களைப் புரிந்துகொள்வோம் . நம் நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியரும் மட்டுமல்ல இந்துக்களும் கிறித்துவர்களும் , கிறித்துவர்களும் இஸ்லாமியரும் மணம் புரியவே கடும் எதிர்ப்பு உள்ளது . சாதிக்கு வெளியே மணம் புரிவோருக்கு எதிராக சாதியமைப்புகள் , கட்டப்பஞ்சாயத்துக்கள் , காவல்துறை ஆகிய வலைப்பின்னலின் ஊடாக மிரட்டல் , ஆணவக் கொலை உள்ளிட்ட கடும் எதிர்ப்பு நிலவும் நிலை பெரியாரின் மண் ஆகிய தமிழ்நாட்டிலேயே உள்ளது எனும் போது மற்ற மாநிலங்களில் எப்படியென சொல்ல வேண்டியதே இல்லை . இம்மாதிரியான உறவுகளை ஆதரிப்பது சமூகத்தின் சாதி , மத பண்பாட்டு அடையாளங்களையும் , அவற்றின்...