Skip to main content

Posts

Showing posts from July, 2021

கிரிக்கெட்: ஹீரோக்கள் இல்லாத காலம்

இன்று ஒரு வகுப்பில் ஒரு மாணவனை சுய அறிமுகம் பண்ணக் கேட்ட போது தனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றான். சரி உனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்றேன். “யாருமே இல்லை” என்றான். ஒரு கணம் சிரிப்பு வந்தாலும் அதுவே சிறந்த பதில் என உடனே தோன்றியது. நான் என் 13வது வயதில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். இப்போது ஆடுகிற வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நானும் அதே பதிலைத் தான் சொல்வேன்.  இந்தியாவில் சச்சினின் ஓய்வுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படவில்லை. கூடவே கும்பிளே, கங்குலி, லஷ்மண், சேவாக் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். பாகிஸ்தானில் இன்ஸமாம், அன்வர், யூனிஸ் கான், ஷோயப், அக்ரம், சக்லைனுக்குப் பின் அப்படியான வீரர்கள் தோன்றவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏ.பி.டிவில்லியர்ஸ், ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தில் பீட்டர்ஸன், மே.இ தீவுகளில் லாரா, ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாஹ், பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்ன், இலங்கையில் அரவிந்த டி சில்டா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, முரளி ஆகியோருக்குப் பிறகு கிரிக்கெட்டில் கடவுளர்களே தோன்றவில்லை. சாமான்யர்கள் அவர்களின் இடத்தை ...

புனைவின் பல வாயில்கள்

அ . முத்துலிங்கம் ~ ஜெயமோகன் நேர்காணலில் இருந்து ஒரு கேள்வியும் பதிலும் பகுதியை கார்ல் மார்க்ஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் எடுத்துப் போட்டு சிலாகித்திருந்திருந்தார் . அதில் அ . முத்துலிங்கத்தின் எழுத்தில் வரும் நுட்பமான அவதானிப்புகளை பாராட்டி விட்டு , அவரது எழுத்தில் ஏன் படிமங்கள் வருவதில்லை என ஜெயமோகன் வினவுகிறார் . அதற்கு முத்துலிங்கம் சொல்லும் பதிலுக்கு செல்லும் முன் அதென்ன ஜெ . மோ சொல்லுகிற “ படிமம் ” என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் .  அசோகமித்திரனின் “ தண்ணீர் ” நாவலில் நீர் ஒரு குறியீடு. நீரின் கழிவு கலந்த தன்மை , எதையும் தன்னில் கலந்து அழுக்காகும் போதும் ஓரிடத்தில் நின்று விடாமல் ஓடிக்கொண்டே இருக்கிற அதன் நீர்மை , அந்த நீர்மையின் பெண்மை என பல விசயங்களைக் குறிக்கும் ஒரு குறியீடு . இன்னும் துல்லியமாக சொல்வதானால் நாவலின் நாயகி தன் அந்த குறியீடு . சு . ராவின் “ ஒரு புளியமரத்தின் கதையில் ” அந்த மரம் ஒரு உருவகம் - அது மாறும் உலகில் மாறாமல் இருக்கும் காலத்தை குறிக்கிறது . அந்த புளிய மரத்தைக் கொ...