Skip to main content

Posts

Showing posts from June, 2021

பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது

பலதார மணம் (polyandry) போல பல - இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது . Cuffing Lounge என ஒரு கிளப்பில் (கிளப் ஹவுஸ்) இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள் , சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர் . பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள் . ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள் . ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு . இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது ; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது என்பதே . திருமண உறவை முறிக்கலாம் என்றால் அதற்கு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது , சான்றுகள் சமர்ப்பித்து வழக்கு நடத்துவது என நரகமாகி விடுகிறது ; வேறு வழியில்லாமல் இரட்டை முகத்துடன் வாழ வேண்டி இருக்கிறது என தம்மையே சபித்துக் கொண்டனர் . இவர்கள் தமது தாத்தா , தந்தை ஆகியோர் எப்படி இரண்டு மனைவியருடன் நிறைய குழந்தைகளுடன் மகிழ்...

சிவசங்கர் பாபாக்களின் பிறப்பிடம் எது?

17 ஜூன் 2021 அன்று சன் டிவியில் மறு ஒளிபரப்பான யாகவா முனிவர் - சிவசங்கர் பாபா குடுமிப்பிடி சண்டையை நான் என் பதின்வயதில் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் . அப்போது எனக்கு யாகவா முனிவர் மீது ஒரு மனச்சாய்வு இருந்தது . ஏதோ சக்தி படைத்தவரோ அல்லது குழப்புகிறாரோ , ஒருவேளை சித்தரோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன் . அடுத்து என் அனுபவங்களும் ஓரளவுக்கு வாசிப்பும் அதெல்லாம் இல்லை , இவரும் ஒரு பொய்யர் எனக் காட்டிக் கொடுத்தது . ஏனென்றால் எந்த ஆன்மீகவாதியும் அடிப்படையில் பொய்யரே என்பது என் திடமான நம்பிக்கை . ஆன்மாவே பொய் எனும் போது ஆன்மீகவாதி என்பது எப்படி நிஜமாக இருக்க முடியும் ? நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது . ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள் . அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன் , பெரும் பணக்காரன் , தியாகி , வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் கு...