Skip to main content

Posts

Showing posts from January, 2019

மீ டூ - சில விமர்சனங்கள் - முன்னுரை

சற்று நீளமான முன்னுரை … MeToo பாலியல் தொந்தரவு , தாக்குதல் மற்றும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஒரு இயக்கம் . 2016 இல் டரானா புர்க் எனும் கறுப்பின அமெரிக்க போராளி இந்த MeToo பிரச்சாரத்தை சமூக வலைதளங்களீல் ஆரம்பித்தார் . ஒரு பதிமூன்று வயதுப் பெண் அவரிடம் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை பகிர்ந்து கொள்ள புர்க் “ நானும் தான் பாதிக்கப்பட்டேன் ” என சொல்ல நினைத்து மனதுக்குள் புதைக்கிறார் . இதைப் பின்னர் அவர் MeToo ஹேஷ்டேகில் இணையத்தில் பகிர்ந்து கொள்ள அது பற்றிக் கொள்கிறது . ஆனால் விளிம்புநிலையினரின் எல்லா பிரச்சாரங்களை போல , இதுவும் பெருமளவில் சமூக கவனம் பெற சினிமாத் துறையினர் அப்பதாகையை ஏந்த வேண்டி வந்தது .

சிகரெட் புகைக்கும் பெண் (1)

சிகரெட் எப்போதுமே சற்றே முரட்டுத்தனமான , உதிரியான , கடுமையான , எதிர் - மனநிலையை உணர்த்தும் ஒரு வஸ்து தான் . பொன்னிற மதுவை கண்ணாடிக் கோப்பையில் உறிஞ்சும் நங்கையை கூட நளினமானவளாக பார்க்க இயலும் . மது ஒரு பெண்ணை கிக்காக காட்டுவதுண்டு . சொல்லப் போனால் , நமது கவர்ச்சிக்கன்னிகளான சில்க் ஸ்மிதா , டிஸ்கோ சாந்தி போன்றோர் விழி நுனியில் போதையை தேக்கி வைத்தவர்களாகவே தம்மைக் காட்டிக் கொண்டனர் . மது போதையை குறிப்புணர்த்தும் அந்த போதையே அவர்களைக் கண்டு பல கோடி ஆண்களை கிளரச் செய்தது . அவர்கள் மதுவை கையில் ஏந்தவில்லை , பார்வையில் ஏந்தினர் . என் அறிவில் , சிகரெட் புகைக்கும் ஹீரோயின்களோ கவர்ச்சிக் கன்னிகளோ இங்கு மிக மிகக் குறைவு . அதற்கு ஒரு காரணம் சிகரெட் போதையை அல்ல மீறலை சுட்டுகிறது என்பது தான் . மேலும் சிகரெட் புகைத்தல் அத்துமீறலை , ஆக்கிரமிப்பை , சிதைவை , ஆக்ரோசத்தை , எதிர்ப்புணர்வை சித்தரிக்கிறது . ஆசையைத் தூண்டும் பெண் பிம்பத்தோடு இந்த உணர்வுகள் பொருந்துவதில்லை .

அன்புள்ள தெரிதா - அருள் ஸ்காட்டின் உரை

டிசம்பர் 2018இன் இறுதியில் எனது மொழியாக்க நூலான “அன்புள்ள தெரிதா” வெளியிடப்பட்டது. பல ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தும் கவிதைத் தொகை இது. நூல் வெளியீட்டின் போது எழுத்தாளரும் விமர்சகருமான அருள் ஸ்காட் பேசிய உரை செறிவானது. அதை மிஸ் செய்தவர்கள் இந்த யுடியூப் காணொளியில் மீண்டும் கேட்கலாம்.

“அன்புள்ள தெரிதா” குறித்து கவிஞர் இந்திரன்

ஆர். அபிலாஷ் போர்கேசிலிருந்து லோர்க்காவரை , குந்தர் கிராசிலிருந்து ஷுன்தரோ தனிகாவா வரை , மார்கரெட் அட்வுட்டிலிருந்து கேரல் ஆன் டப்பி வரை தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத 32 உலகக் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து அக்கவிஞர்கள் குறித்த சிறு அறிமுகத்தோடு வெளிவந்திருக்கும் ”அன்புள்ள தெரிதா” எனும் பெயரில் உயிர்மை மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் என்னைக் கவர்கிறது.