விஜய்டிவி குறும்பட போட்டியின்
போது “கற்றது தமிழ்” ராம் குறும்படம் எடுப்பது முழுநீளப் படம் எடுப்பதற்கான தகுதி அல்ல
என்று பேசி இளைய இயக்குநர்களை கசப்படைய வைத்தார். சமீபமாக அவர் குறும்படம் எடுத்து
முழுநீள வடிவிலும் வெற்றி பெற்ற “பீட்சா”, “சூது கவ்வும்” ஆகிய படங்களையும் சூழலை கெடுக்கும்
முயற்சிகள் என கண்டித்திருப்பதாக ஒரு நண்பர் என்னிடம் கவலை தெரிவித்தார்.
Saturday, May 18, 2013
Friday, May 17, 2013
வேலையற்ற வேலை
எதற்கெல்லாம் அஞ்சுகிறோம்? வேலை
போய் விடுமோ என்று, நம்மை நட்பு வட்டத்தில் மறந்து விடுவார்களோ என்று, சமூகத்தில்,
வேலையிடத்தில், சொந்தங்கள் மத்தியில் மதிக்காமல் இருப்பார்களோ என்று. இந்த அச்சம் நம்மை
கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பலவீனமாக்குகிறது. துர்சொப்பனங்களை, மன அழுத்தத்தை, தனிமையை
தருகிறது. இன்னொரு புறம் வீட்டுக்குள், அலுவலகத்தில் பொறுப்பாக அக்கறையாக இயங்கவும்
வைக்கிறது. ஒரு கணவனாக, பெற்றோராக, ஊழியனாக உங்களுக்கு இருக்க முழு விருப்பமில்லாமல்
இருக்கலாம். ஆனால் இந்த அச்சம் உங்களை ஆவேசத்துடன் இந்த பணிகளை செய்ய வைக்கிறது.
Monday, May 13, 2013
சாதி சங்கங்களை தடை செய்யலாமா?
பா.ம.கவை முன்வைத்து
ஜெயா சாதி சங்கங்களை தேவைப்பட்டால் தடை செய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த
மிரட்டல் இந்நாட்டில் உள்ள சாதி பிரச்சனைகளுக்கு சாதி சங்கங்கள் தாம் காரணம் என்கிற
நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டது. சாதி சங்கங்கள் தாம் தமிழ் நாட்டில் உள்ள சாதி வன்முறைக்கு
காரணம் என நம்மை நம்ப சொல்கிறாரா ஜெயா?
Sunday, May 12, 2013
மதுரைக்கார படங்களும் வன்முறை பண்பாடும்
மதுரைக்கார படங்களில்
வன்முறை ஒரு போர்னோ இணையதளத்தில் வருவது போல் விதவித வடிவங்கள் எடுக்கின்றன. ஒவ்வொன்றும்
தம் விகார வகைமையால் நம்மை வியப்புறவும் ரசிக்கவும் அருவருப்படையவும் வைக்கின்றன. மதுரைக்கார
வன்முறைப் பண்பாடு கணிசமான வணிக வெற்றியும் கண்டுள்ளது. மக்கள் விரும்புகிறார்கள்.
கலை ரசிகமணிகளும் அதன் எதார்த்தத்தை மெச்சுகிறார்கள். மதுரைக்கார இயக்குநர்கள் “எங்க
மதுரை நிஜத்தில் இதை விட நூறு மடங்கு வன்முறையானது” என்று கிலி காட்டுறார்கள். ஆனால்
மதுரை நேரில் போய் வருபவர்கள் ஏன் சினிமாவில் பார்ப்பது போல் நிஜ மதுரை இல்லை என்று
புகார் தெரிவிக்கிறார்கள். விமர்சனமுகமாக ஒரு சாரார் “மதுரைக்கார இயக்குநர்கள் தம்
இளம்பிராயத்தில் பார்த்த மதுரையை திரும்பத் திரும்ப படமாக எடுக்கிறார்களே ஒழிய அவர்களுக்கு
சமகால மதுரை தெரியாது” என்கிறார்கள். ஏன் இவ்வளவு முரண்பாடு?
Sunday, May 5, 2013
ஜி.நாகராஜன் நினைவோடை: வீழ்ச்சியும் காரணங்களும்
இந்த சின்ன நூலில்
சு.ரா ஜி.நாகராஜன் குறித்த நினைவுகளை நிறைய கவனம், கொஞ்சம் கோபம், எரிச்சலுடன் கசப்பு
ஏமாற்றம் மற்றும் துக்கம் ஆகியவற்றை விளக்க முடியாத ஒருவகை அன்புடன் கலந்து பேசுகிறார்.
சு.ராவுக்கு உரித்தான மென்மையான அங்கதமும் கூர்மையும் கூடிய குரல் இதிலும் ஒலிக்கிறது.
தனக்கு தெரியாத எதையும் கூறி விடக் கூடாது, ஜி.நாகராஜனை மிகைப்படுத்தி ஒரு சீரழிவு
நாயகனாக சித்தரிக்க கூடாது என்கிற அக்கறையும் இருக்கிறது. இந்த நேர்மை தான் இப்புத்தகத்தின்
பலம். வாசகனை ஆச்சரியப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கும் எத்தனிப்புகள் எதையும் செய்யவில்லை.
Friday, May 3, 2013
மந்திர தந்திர வசீகரமும் பேனா நட்பும்
இன்று தினகரனின் விளம்பரங்களில் பார்வையோட்டிக் கொண்டிருந்த போது சட்டென்று சுவாரஸ்யம் ஏற்பட்டது.
சில ஆண்குறியை வளர்க்கும் மருந்து விளம்பரங்கள். அதில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூட குறிப்பிட்டிருந்தார். இந்த கூச்சமும் பயமும் மிகை கற்பனையும் ரொம்ப காலமாய் நம்மவர்களுக்கு இருக்கிறது போலும். சின்ன வயதில் மாத்ருபூதம் டி.வியில் இதிலுள்ள அபத்தத்தை நக்கலாய் விளக்கியது நினைவு வந்தது. பெண்களின் மார்பகத்தை பெரிசாக்குவதற்கு கூட மருந்து விளம்பரம். அதைப் பார்த்து ஏதோ ஒரு பெண் ரகசியமாய் அஞ்சலில் பணம் அனுப்பலாம்.
அடுத்ததாய் ஆண், பெண்ணை, தம்பதியிரனரை வசீகரிக்கும் மந்திரவாதிகள் மூவர் விளம்பரம் செய்திருந்தனர். இன்னொருவர் நாலே மணி நேரத்தில் மந்திரவாதம் கற்றுத் தருகிறாராம். பக்கத்தில் மூவர் மெழுகுவர்த்தி செய்ய கற்றுத் தருவதாக ஒரே போல் விளம்பரம் செய்திருந்தனர். என்னன்னவோ மனிதர்கள் கற்கும் இக்காலத்தில் கேவலம் மெழுகுவர்த்தி செய்வதற்கு அவ்வளவு டிமாண்டா என்ன? ஆனால் மாந்திரகம் போல் சுவாரஸ்யமாக இராது. அதுவும் நாலே மணிநேரத்தில்!
இதெற்கெல்லாம் உச்சம் பேனா நண்பர்கள். ஒருவர் ரெண்டு செல் நம்பர்கள் கொடுத்து ”ஆண்/பெண் தம்பதிகள்” பேனா நண்பராக விரும்பினால் தொடர்பு கொள்ள கேட்டிருந்தார். சந்தேகங்கள் மூன்று. ஒன்று, பேனா நண்பராக வேண்டியவர் ஏன் அதற்கு செல் நம்பர் கொடுக்கணும்? இரண்டு, செல்லில் பேசிய பிறகு எதற்கு மெனக்கெட்டு பேனா காகிதம் ஸ்டாம்பு எடுத்து எழுதி ஒட்டி ஸ்நேகிகம் வளர்க்க வேண்டும்? கடைசியாய், அதென்ன “ஆண் பெண் தம்பதியர்”? சாதா ஆண் பெண்ணிடம் எல்லாம் நட்பு வளர்க்க மாட்டாரா?
எனக்கு இது நிஜமாகவே பேனா நட்பு விளம்பரமாக படவில்லை.
சரி எதற்கும் கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்தேன். அப்புறம் மறந்து விட்டேன்.
சில ஆண்குறியை வளர்க்கும் மருந்து விளம்பரங்கள். அதில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூட குறிப்பிட்டிருந்தார். இந்த கூச்சமும் பயமும் மிகை கற்பனையும் ரொம்ப காலமாய் நம்மவர்களுக்கு இருக்கிறது போலும். சின்ன வயதில் மாத்ருபூதம் டி.வியில் இதிலுள்ள அபத்தத்தை நக்கலாய் விளக்கியது நினைவு வந்தது. பெண்களின் மார்பகத்தை பெரிசாக்குவதற்கு கூட மருந்து விளம்பரம். அதைப் பார்த்து ஏதோ ஒரு பெண் ரகசியமாய் அஞ்சலில் பணம் அனுப்பலாம்.
அடுத்ததாய் ஆண், பெண்ணை, தம்பதியிரனரை வசீகரிக்கும் மந்திரவாதிகள் மூவர் விளம்பரம் செய்திருந்தனர். இன்னொருவர் நாலே மணி நேரத்தில் மந்திரவாதம் கற்றுத் தருகிறாராம். பக்கத்தில் மூவர் மெழுகுவர்த்தி செய்ய கற்றுத் தருவதாக ஒரே போல் விளம்பரம் செய்திருந்தனர். என்னன்னவோ மனிதர்கள் கற்கும் இக்காலத்தில் கேவலம் மெழுகுவர்த்தி செய்வதற்கு அவ்வளவு டிமாண்டா என்ன? ஆனால் மாந்திரகம் போல் சுவாரஸ்யமாக இராது. அதுவும் நாலே மணிநேரத்தில்!
இதெற்கெல்லாம் உச்சம் பேனா நண்பர்கள். ஒருவர் ரெண்டு செல் நம்பர்கள் கொடுத்து ”ஆண்/பெண் தம்பதிகள்” பேனா நண்பராக விரும்பினால் தொடர்பு கொள்ள கேட்டிருந்தார். சந்தேகங்கள் மூன்று. ஒன்று, பேனா நண்பராக வேண்டியவர் ஏன் அதற்கு செல் நம்பர் கொடுக்கணும்? இரண்டு, செல்லில் பேசிய பிறகு எதற்கு மெனக்கெட்டு பேனா காகிதம் ஸ்டாம்பு எடுத்து எழுதி ஒட்டி ஸ்நேகிகம் வளர்க்க வேண்டும்? கடைசியாய், அதென்ன “ஆண் பெண் தம்பதியர்”? சாதா ஆண் பெண்ணிடம் எல்லாம் நட்பு வளர்க்க மாட்டாரா?
எனக்கு இது நிஜமாகவே பேனா நட்பு விளம்பரமாக படவில்லை.
சரி எதற்கும் கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்தேன். அப்புறம் மறந்து விட்டேன்.
Thursday, April 25, 2013
வா.மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்
வா.மணிகண்டனுக்கு சுஜாதா விருது கிடைத்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அவர் சரளமாக சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர். சில வேளை இணையத்தில் அவர் வேண்டுமென்றே பரபரப்பான மேட்டரை எழுதுவார். சிலவேளை இலக்கில்லாமல் ஓட்டுவார். ஆனால் நம்மோடு நேரடியாக பேசும் தொனியில் சலிக்காமல் எழுதுவார். முக்கியமாக அவர் பொய் சொல்வதாக படாது.
Wednesday, April 24, 2013
இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்
இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்
எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள்
பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும்
ஒருமுறை
உற்சாகத்துடன்
நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும்
வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ
உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய
கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை
மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப்
போவதில்லை
ஒருக்காலும் இல்லை
Tuesday, April 23, 2013
சதயம்: குற்றமும் தூக்குத்தண்டனையும்
எம்.டி வாசுதேவன்
நாயர் ஒரு முக்கியமான நாவலாசிரியருடன் வெற்றி பெற்ற திரைக்கதையாளரும் கூட. மலையாளத்தின்
பொற்கால நடுநிலைப் படங்களில் சிறந்த ஒன்றான “சதயம்” அவரது திரைக்கதையில் உருவானது.
92இல் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. மோகன் லாலின் நுட்பமான நடிப்பும் சிபி
மலயிலின் கூர்மையான இயக்குமும் கூடுதல் பலங்கள். படம் தூக்குத்தண்டனையை பற்றியது.
மண்ணைப் போல இருப்பது
Subscribe to:
Posts (Atom)









